Wednesday, September 13, 2006

பகிர்வு


அண்மையில் என் இரண்டாவது கவிதை தொகுப்பிற்கு சிற்பி அறக்கட்டளையின் விருது கிடைத்தது. அதையொட்டி பொள்ளாச்சிக்கு நான் அழக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் முழுக்க நிகழ்வுகள் நடந்தேறின.இலங்கை கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் நார்வே நாட்டிலிருந்து இந்நிகழ்வுக்காகவே வந்திருந்தது அனைவரும் மகிழதக்கதாய் இருந்தது. நானும் இந்திரனும் நண்பர் காளிதாஸ் உதவியுடன் டாப் சிலிப் சென்றோம். காட்டு விளங்குகள் சூழ்ந்த அங்கு ஓர் இரவு தங்கிய அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. யானைகள் பெருகிய மேற்கு தொடர்ச்சி மலையின் விஷயங்களை விரைவில் எழுதுகிறேன்

No comments: